Thursday, October 23, 2008

நட்புடன்.......


நட்பு என்பது யாதெனில்....
யாதென்பதால் இருப்பதுதான் நட்பு!
நட்பு எனப்படுவது....
படுவதெல்லாம் படுவதுதான் நட்பு!
நட்புடன் உரைப்பது....
உரைத்துப் பார்த்து தேய்வதல்ல நட்பு!
நட்பாகி....
ஆவதுதான் நட்பு!
நட்பைப்போல்....
போலியில் இல்லை நட்பு!
நட்பில் தொடங்கி....
தொடங்கி முடிப்பதல்ல நட்பு!
நட்பாய்ப் பேசி....
பேசித் தொலைவதல்ல நட்பு!
நட்புடன் நெருங்கி....
நெருக்கத்தின் உருக்கமே நட்பு!
நட்புடன் இருந்து....
இருத்தலின் சுகமே நட்பு!

- கவிதாயினி ஜி. மஞ்சுளா
மதுரை, தமிழ்நாடு.

No comments: