Saturday, November 8, 2008

"தாழம்பூ" நவம்பர் 2008 இதழ்!


தனது இதழுலகப் பயணத்தில் 305வது இதழாக மலர்ந்திருக்கும் "நவம்பர்-2008" இதழ்!
அமரர் வல்லிக்கண்ணன் அவர்களின் எழுத்துலக வெற்றிகளை நினைவுகூர்ந்து ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராஜன் எழுதியுள்ள "வாழும் தமிழ் வல்லிக்கண்ணன்" சிறப்புக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மற்றும், இந்தியாவின் முதல் பெண் புனிதராக போப் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அல்போன்ஷா பற்றிய கட்டுரை, இந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்றுள்ள அரவிந்த் அடிகாசென் (சென்னையில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, ஆஸ்திரேலியாவில் படித்து, தற்போது மும்பையில் வசிப்பவர்) பற்றிய கட்டுரை, நூல் அறிமுகம், வாசகர் கடிதங்கள், கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Thursday, November 6, 2008

சிறப்புப் பெயர்!


மிக்க மதிப்பும்
மிகுந்த மரியாதையும்
தக்க பெயர்ச் சிறப்பும்
தந்து வைத்தோம் பலருக்கு....
முன்னாள் குடியரசுத் தலைவர்
முன்னாள் அமைச்சர்
முன்னாள் ஆளுநர்
முன்னாள் நீதியரசர்
முன்னாள் இராணுவத்தினர்...
ஏன்? குற்றவாளிகூட,
முன்னாள் குற்றவாளி! - ஆனால்,
"முன்னால் சுமங்கலி"க்கு மட்டும்
சிறப்புப் பெயர் தந்தோம்
"விதவை" என்று!

- 'முத்தமிழ்த் தென்றல்' காற்று
கோவை - 641 012.

Saturday, November 1, 2008


உன் அழகில்
கண்பட்டுவிடக் கூடாதேயென
திருஷ்டிப்பொட்டு வைக்கிறாய்...
என்ன செய்ய,
உனக்குத் திருஷ்டிப்பொட்டும்
அழகாகிவிடுகிறது!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Thursday, October 23, 2008

"தாழம்பூ" - அக்டோபர் 2008 இதழின் அட்டைப்படம்


தனது இதழுலகப் பயணத்தில் "304 வது இதழாக" மலர்ந்திருக்கும் "தாழம்பூ"வின் அட்டைப்படம் இது!

நட்புடன்.......


நட்பு என்பது யாதெனில்....
யாதென்பதால் இருப்பதுதான் நட்பு!
நட்பு எனப்படுவது....
படுவதெல்லாம் படுவதுதான் நட்பு!
நட்புடன் உரைப்பது....
உரைத்துப் பார்த்து தேய்வதல்ல நட்பு!
நட்பாகி....
ஆவதுதான் நட்பு!
நட்பைப்போல்....
போலியில் இல்லை நட்பு!
நட்பில் தொடங்கி....
தொடங்கி முடிப்பதல்ல நட்பு!
நட்பாய்ப் பேசி....
பேசித் தொலைவதல்ல நட்பு!
நட்புடன் நெருங்கி....
நெருக்கத்தின் உருக்கமே நட்பு!
நட்புடன் இருந்து....
இருத்தலின் சுகமே நட்பு!

- கவிதாயினி ஜி. மஞ்சுளா
மதுரை, தமிழ்நாடு.

"கலைமாமணி" டாக்டர் வாசவன் அவர்களின் பாராட்டு!


ஆற்றங்கரைத் "தாழம்பூ"வைக் கற்றாய்ந்தார் அரங்கில் மணம் விரிக்கச்செய்திடும் திரு. எம்.எஸ்.கோவிந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்தும், வணக்கமும்.

தாழம்பூவை என் நெஞ்செல்லாம் மடல் விரித்திடவும், மறக்கவொண்ணா என் நெகிழ்ச்சியில் நெய்திடவும் செயல்புரியும் தங்கள் இலக்கிய வேள்விக்கு என் அணிலே ஆகுதி. நான் என்றோ எழுதியதை, தேனீயைப்போலச் சேகரித்து, தாழம்பூவில் வழங்கியிருக்கிறீர்கள். அதைப் படித்துவிட்டு, மதுரை கவிதாயினி மஞ்சுளா என்னுடன் ஒருமணி நேரம் தொலைபேசியில் பேசினார். "போராடி வெல்லத் தூண்டும் சக்தி'யாக இருப்பதாய்ச் சொன்னார்.

இதழ் முழுவதும் படித்தேன். எல்லோருக்கும் உதவிக்கரமும், இடமும் தரும் நீங்கள், சில சமயம் உங்கள் முகவரியைக்கூட இதழில் போடவில்லை. போடவேண்டும். காற்றுக்கும் முகவரி வேண்டிய காலமிது. உங்கள் காற்றுச் சேவைக்குப் பாராட்டுக்கள்.

- கலைமாமணி டாக்டர் வாசவன்
தலைவர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
சென்னை 600035.

"தாழம்பூ" இதழின் வரலாறு

"தாழம்பூ" இதழைக் கையெழுத்து இதழாகத் துவங்கி, அதைத் தொடர்ந்து நடத்துவதில் தனக்கு விளைந்த துன்பங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராஜன்.


Thursday, October 16, 2008

'தாழம்பூ' இதழின் வரலாறு.

24 ஆண்டுகளாக கையெழுத்து இதழாக நடத்தப்பட்டு, இப்போது கணினி அச்சுப் பிரதியாக வெளியிடப்படும் "தாழம்பூ" பல்சுவை இதழ், இப்போது இணையத்தில் ஓர் வலைப்பூவாய் மலர்ந்துள்ளது. இணைய வாசகர்களின் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

- ஆசிரியர் குழு.